
சிவகாசி: பட்டாசு தொழிலாளர்களுக்கு உற்பத்தி குறித்த நேரடி செயல்முறை பயிற்சியும், வேதிப் பொருட்களின் விளைவு குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்த தொழிலக பாதுகாப்பு துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என டான்பாமா பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிவகாசி அருகே சின்னகாமன்பட்டி பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். விபத்து குறித்து தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்கம் (டான்பாமா) அலுவலகத்தில் அதன் தலைவர் கணேசன், காளீஸ்வரி ஃபயர் ஒர்க்ஸ் உரிமையாளர் ஏ.பி.செல்வராஜன் உள்ளிட்டோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.