• July 2, 2025
  • NewsEditor
  • 0

இந்தியா – அமெரிக்கா இடையே பெரிய வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று ட்ரம்ப் கூறி வருகிறார்.

இந்திய அரசின் பக்கத்தில் இருந்து இது வெறும் தகவலாகத் தான் வருகிறதே தவிர, உறுதியாக எதுவும் வெளியில் சொல்லப்படவில்லை.

இந்த ஒப்பந்தம் குறித்து ட்ரம்ப் மீண்டும் பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது…

“இந்தியா உடன் ஒப்பந்தம் போட இருக்கிறோம் என்று நினைக்கிறேன். இந்த ஒப்பந்தம் வேறு மாதிரியாக இருக்கும். இந்த ஒப்பந்தத்தின் படி, நாம் இந்தியாவிற்குள் சென்று, அங்கு போட்டி போட முடியும். இதுவரை இந்தியா தன் நாட்டிற்குள் வேறு யாரையும் வர அனுமதித்ததில்லை.

மோடி, ட்ரம்ப்

ஆனால், இந்தியா இனி அதை செய்யும் என்று நினைக்கிறேன். அதை அவர்கள் செய்தால் என்றால், அவர்களுக்கு நாம் குறைந்த வரி விதிக்கும் ஒப்பந்தத்தை மேற்கொள்வோம்” என்று பேசியுள்ளார்.

இந்திய அரசு சொல்ல வேண்டும்!

மேலே கூறியது போல, இந்திய அரசு இந்த ஒப்பந்தம் குறித்து இதுவரை எதுவுமே வெளிப்படுத்தவில்லை.

இந்த ஒப்பந்தம் குறித்தே ட்ரம்ப் மூலம் தான் தெரிந்தது. ‘உண்மையில் இப்படி ஒரு ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடந்துவருகிறதா?’ ‘நடந்து வந்தால், அது எந்த மாதிரியான ஒப்பந்தமாக இருக்கும்?’ என்று இந்திய அரசு தெரிவிக்க வேண்டும்.

அதிபர் ட்ரம்ப்
அதிபர் ட்ரம்ப்

ட்ரம்ப் கூறுவதுப்போல, அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்கப் போகிறதா என்றும் நமக்கு தெரிய வேண்டும். அப்படி வந்தால் இந்தியாவில் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் மேம்படும்.

இன்னொரு பக்கம், இந்திய நிறுவனங்கள் போட்டிகள் மிகவும் அதிகரிக்கும். அதனால், இந்திய நிறுவனங்கள் தன்னை தானே மேலும் மேம்படுத்த வேண்டும்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *