
சென்னை: கல்லூரி மாணவர்களுக்கு இந்த ஆண்டு முதல் லேப்-டாப் வழங்கப்படும் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற 'வெற்றி நிச்சயம்' திட்ட தொடக்க விழாவில் முதல்வர் மு..க.ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழக அரசின் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சார்பில் 'நான் முதல்வன்' திட்டத்தின் 3-வது ஆண்டு வெற்றி விழாவும், 'வெற்றி நிச்சயம்' திட்டத்தின் தொடக்க விழாவும் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் இத்திட்டத்தையும் அடுத்த ஆண்டு ஷாங்காய் நகரில் நடைபெறும் உலக திறன் போட்டியில் பங்கேற்பதற்கான ஆன்லைன் பதிவையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.