
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் உள்ள ரியாக்டர் நேற்று முன்தினம் வெடித்துசிதறியது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 60-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சிகாச்சி ஆலையின் துணை தலைவர் எல்.எஸ் கோஹன் உட்பட இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று விபத்து நடந்த ஆலையை ஆய்வு செய்தார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.