
சென்னை: திமுக கூட்டணிக்கு வேறு கட்சிகளும் வர வாய்ப்புள்ளதாகவும் வந்தால் கலந்து பேசி முடிவு செய்வோம் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்குச்சாவடி தோறும் 30 சதவீதம் பேரை திமுகவில் உறுப்பினராக சேர்க்கும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ எனும் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகம் முழுவதும் ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகிறது. ஜூலை 3 முதல் (நாளை) தமிழ்நாடு முழுவதும் வீடுவீடாகச் சென்று மக்களைச் சந்திக்க இருக்கிறோம்.