• July 2, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: ​டாஸ்​மாக் மது​பானக் கடைகளில் காலி மது பாட்​டில்​களை திரும்​பப்​பெறும் பணிக்கு தனி​யாக பணி​யாளர்​களை நியமிப்​பது தொடர்​பாக அரசின் பிரத்​யேக குழுவை அணுகலாம் என சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. சுற்​றுச்​சூழல் மாசுவைக் கருத்​தில் கொண்டு டாஸ்​மாக் மது​பானக் கடைகளில் விற்​கப்​படும் மது பாட்​டில்​களை திரும்​பப்​பெற சென்னை உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

அதன்​படி மது​பாட்​டில்​களை விற்​கும்​போது ரூ.10 கூடு​தலாக பெற்​றுக்​கொண்​டு, காலி பாட்​டில்​களை ஒப்​படைத்​தால், அந்த ரூ.10 திருப்​பிக் கொடுக்​கப்​படும். இத்​திட்​டம் தமிழகம் முழு​வதும் அமல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது. இந்​தப் பணி​களுக்கு டாஸ்​மாக் கடைகளில் தற்​போது பணி​யாற்​றும் ஊழியர்​களை நியமிக்​காமல், தனி​யாக பணி​யாளர்​களை நியமிக்​கக் கோரி​யும், காலி மது​பாட்​டில்​களை சேகரித்து வைக்க தனி இடம் மற்​றும் உட்​கட்​டமைப்பு வசதி​களை ஏற்​படுத்​தித் தரக் கோரி​யும், டாஸ்​மாக் ஊழியர் மாநில சம்​மேளனம் சார்​பில் சென்னை உயர் நீதி​மன்​றத்தில் வழக்கு தொடரப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *