
சென்னை: பார் கவுன்சில், மெடிக்கல் கவுன்சில் போன்ற இந்தியாவில் உள்ள முக்கிய அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பி.ரமேஷ்பாபு தாக்கல் செய்திருந்த மனு: வழக்கறிஞர்களின் முக்கிய அமைப்பாக கருதப்படும் பார் கவுன்சில் மற்றும் மருத்துவர்களுக்கான மெடிக்கல் கவுன்சில், டெண்டல் கவுன்சில், பார்மசி கவுன்சில் போன்ற இந்தியாவில் உள்ள பிரதான அமைப்புகளின் நிர்வாகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை.