
கோவை: “தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் மின்கட்டணம் 63.6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு அரசு உடனடியாக இந்த ஆண்டு உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்” என தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்நாடு அனைத்து தொழில்முனைவோர் கூட்டமைப்பின் தலைவர் முத்து ரத்தினம், செயலாளர் ஜெயபால் ஆகியோர் கோவை பிரஸ் கிளப் வளாகத்தில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழ்நாட்டில் ‘எம்எஸ்எம்இ’ தொழில்துறை சார்ந்தவர்கள் எண்ணிக்கை 46 லட்சத்து 45 ஆயிரத்து 867 பேர். உற்பத்தி துறை சார்ந்தவர்கள் 11 லட்சத்து 69 ஆயிரம் ஆகும். நாட்டின் மொத்த எம்எஸ்எம்இ வளர்ச்சியில் தமிழ்நாடு 15 சதவீத பங்களிப்பை கொண்டுள்ளது. இரண்டு கோடிக்கும் மேற்பட்டவர்கள் நேரடியாக வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர்.