• July 1, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: பாஜக எம்​.பி. நிஷி​காந்த் துபே எக்ஸ் தளத்​தில் நேற்று வெளி​யிட்ட பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: காங்​கிரஸ், ஊழல் மற்​றும் அடிமைத்​தனம். இந்த வகைப்​படுத்​தப்​ப​டாத ஆவணம் கடந்த 2011-ம் ஆண்டு அமெரிக்க புல​னாய்வு அமைப்​பால் (சிஐஏ) வெளி​யிடப்​பட்​டது. அதில், மறைந்த காங்​கிரஸ் மூத்த தலை​வர் எச்​.கே.எல்​.பகத் தலை​மையி​லான 150-க்​கும் மேற்​பட்ட எம்​.பி.க்​கள், ரஷ்​யா​வின் உளவாளி​யாக செயல்பட அந்த நாட்​டிட​மிருந்து நிதி பெற்​ற​தாகக் கூறப்​பட்​டுள்​ளது.

காங்​கிரஸ் ஆட்​சி​யின்​போது, ரஷ்ய புல​னாய்வு அமைப்​பைச் சேர்ந்த 1,100 பேர் இந்​தி​யா​வில் இருந்​தனர். அவர்​கள், அரசு உயர் அதி​காரி​கள், தொழில் நிறு​வனங்​கள், கம்​யூனிஸ்ட் கட்​சி​யினர் மற்​றும் கருத்து உரு​வாக்​கம் செய்​பவர்​களை தங்​கள் கைக்​குள் போட்​டுக் கொண்​டிருந்​தனர். தேர்​தல் என்ற பெயரில் காங்​கிரஸ் வேட்​பாளர் சுபத்ரா ஜோஷி, ஜெர்​மனி அரசிட​மிருந்து 5 லட்​சம் ரூபாய் பெற்​றுள்​ளார். தேர்​தலில் தோல்வி அடைந்த பிறகு இந்​தோ -ஜெர்​மன் மன்​றத்​தின் தலை​வ​ரா​னார். இது ஒரு நாடா அல்​லது இடைத்​தரகர்​களின் கைப்​பாவையா என காங்​கிரஸ் பதில் அளிக்​க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *