• July 1, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னையில் 8 இடங்களில் வீடுகளுக்கான இயற்கை எரிவாயு விநியோக மையங்களை, டிட்கோ மூலமாக அமைக்க மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நேற்று அனுமதி வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி மன்றக்கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில், ரிப்பன் மாளிகை அரங்கில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் நிறைவேற் றப்பட்ட தீர்மானங்கள்: சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் வார்டு மேம்பாட்டு நிதியிலிருந்து 37 வகையான திட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என வரையறுக்கப்பட்டுள்ளது. அதில் 38-வதாக பல்நோக்கு கட்டிடம் கட்டவும் நிதி செலவிட அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *