• July 1, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: இந்தியாவில் சமூக பாதுகாப்பு திட்டங்களால் பயனடைவோர் 10 ஆண்டில் 19-லிருந்து 64.3 சதவீதமாக அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் அமைச்சகத்தின் புள்ளிவிவரம் கூறுகிறது. ‘நீடித்த வளர்ச்சி இலக்​கு​கள் (எஸ்​டிஜி) – நேஷனல் இண்​டிகேட்​டர் பிரேம்​வொர்க் முன்​னேற்ற அறிக்கை 2025’ என்​பது இந்​தி​யா​வின் வளர்ச்சி குறித்த தரவு சார்ந்த ஆதா​ரங்​களை வழங்​கு​கிறது.

புள்​ளி​யியல் தினத்தை முன்​னிட்டு வெளி​யிடப்பட்​டுள்ள இந்த அறிக்​கையில், வறுமை​யில் வாடும் அனைத்து வயது ஆண்​கள், பெண்​கள் மற்​றும் குழந்​தைகளின் விகிதம் 2019-21-ல் 14.96% ஆக குறைந்​துள்​ள​தாக​ தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக வங்கி அறிக்​கை​யில், இந்​தி​யா​வில் தீவிர வறுமை 2011-12-ல் 27.1% ஆக இருந்​த​தாக​வும் இது 2022-23-ல் 5.3% ஆக குறைந்​து​விட்​ட​தாக​வும் கூறப்​பட்​டிருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *