• July 1, 2025
  • NewsEditor
  • 0

மும்பை: ம​கா​ராஷ்டிர தொடக்​கப் பள்​ளி​களில் மும்​மொழி கொள்கை ரத்து செய்​யப்​பட்டு உள்​ளது. மகா​ராஷ்டி​ரா​வில் முதல்​வர் தேவேந்​திர பட்​னா​விஸ் தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி ஆட்சி நடத்தி வரு​கிறது. அந்த மாநிலத்​தில் மராத்தி மற்​றும் ஆங்​கில வழிக் கல்வி பள்​ளி​களில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையி​லான தொடக்​க பள்​ளி​களில் கடந்த ஏப்​ரலில் மும்​மொழி கொள்கை அமல் செய்​யப்​பட்​டது.

இதன்​படி தொடக்​கப் பள்​ளி​களில் 3-வது கட்​டாய மொழி பாட​மாக இந்தி கற்​பிக்​கப்​படும் என்று அறிவிக்​கப்​பட்​டது. இதற்கு உத்​தவ் தாக்​கரே தலை​மையி​லான சிவசே​னா, மகா​ராஷ்டிர நவ நிர்​மாண் சேனா, சரத் பவார் தலை​மையி​லான தேசி​ய​வாத காங்​கிரஸ் உள்​ளிட்ட கட்​சிகள், அமைப்​பு​கள் கடும் எதிர்ப்பு தெரி​வித்​தன. இதைத் தொடர்ந்து அரசாணை நிறுத்​திவைக்​கப்​பட்​டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *