
பாட்னா: பிஹார் மாநிலம் பாட்னா-கயா இடையே உள்ள ஜெகனாபாத் பகுதியில் ரூ.100 கோடியில் சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது.
ஜெகனாபாத் பகுதியில் சுமார் 7.48 கிலோமீட்டர் தூரம் அமையும் இந்த சாலையில் நடுவில் இருந்த மரங்கள் இடையூறாக இருந்தன. இதனையடுத்து அந்த மரங்களை அகற்றும்படி வனத்துறையிடம் மாவட்ட நிர்வாகம் கோரிக்கை வைத்தது. ஆனால், இதற்கு பதிலாக வனத்துறைக்கு 14 ஹெக்டேர் நிலத்தை ஒதுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு வனத்துறை அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர்.