• June 30, 2025
  • NewsEditor
  • 0

அரசு சார்​பில் வழங்​கப்​பட்ட இலவச பட்டா ஆவணங்​கள் தொடர்​பான கோப்பு தாம்​பரம் வட்​டாட்​சி​யர் அலு​வல​கத்​தில் மாய​மானதால் கணினி​யில் பதிவேற்​று​வ​தில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது. மாவட்ட நிர்​வாகம் இதற்கு தீர்வு காண வேண்​டும் என, பொது​மக்கள் கோரிக்கை வைத்​துள்​ளனர் தாம்​பரம் அருகே மாடம்​பாக்​கம் கிராமம், அண்ணா நகர், சர்வே எண் 686/ஏ, 686/1சி என்ற சர்வே எண்​ணில் புஞ்சை தரிசு நில வகை கொண்ட நிலத்​தில் குடி​யிருந்த, 34 நபர்​களுக்கு கடந்த, 2008-ம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டா வழங்​கப்​பட்​டது.

இதனை தொடர்ந்​து, 2012-ம் ஆண்டு கூடு​தலாக, 4 பேருக்கு பட்டா வழங்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் இந்த இலவச பட்​டாக்​களை கணினி​யில் பதிவேற்​றம் செய்து கணினி பட்டா வழங்க வேண்​டும் என, பொது​மக்​கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரு​கின்​றனர். இது தொடர்​பாக பலமுறை மாவட்ட நிர்​வாகம், அமைச்​சர், எம்​எல்​ஏ, வட்​டாட்​சி​யர், ஜமாபந்​தி, மக்​கள் குறைதீர் முகாம் என பல்​வேறு இடங்​களில் மனு அளித்​தும் தீர்வு கிடைக்​க​வில்​லை.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *