
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் உள்ள மருந்துகள் உள்பட பல்வேறு பொருட்களை தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட உலை வெடிப்பில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து குறித்து போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தெலங்கானாவின், சங்கரெட்டி மாவட்டம், பாஷமிலாராம் தொழிற்பேட்டையில் உள்ள மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் ரசாயன ஆலையில் இன்று (திங்கட்கிழமை) இந்த விபத்து நிகழ்ந்தது. அதில் 8 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, 13 பேர் இடிபாடுகளுக்கு இடையேயிருந்து மீட்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.