• June 30, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: விழுப்புரம் தொகுதி திமுக எம்எல்ஏ லட்சுமணன் மீதான பணமோசடி வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், விழுப்புரத்தை சேர்ந்த மருத்துவர் ரங்கநாதன் தாக்கல் செய்த மனுவில், “கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் திமுக சார்பில் டாக்டர் லட்சுமணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து, நண்பர் என்ற முறையில் தேர்தல் செலவுக்காக 2 கோடியே 50 லட்சம் ரூபாயை 5 தவணைகளாக வழங்கினேன். தேர்தல் முடிந்ததும் 2023-ம் ஆண்டு 50 லட்சம் ரூபாய் என 5 காசோலைகளை வழங்கினார். ஆனால், காசோலையில் பணம் இல்லை என திரும்பிவிட்டது. இதையடுத்து, பணத்தை திரும்பி வழங்க உத்தரவிடக்கோரி விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *