
சென்னை: கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு கோயில் தொழிலாளர்கள் சங்கத்தின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு திருக்கோயில் தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள குறுங்காலீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் மாநில காப்பாளர் வி.கண்ணன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் எஸ்.தனசேகர், மாநில இணை செயலாளர் தாம்பரம் இரா.ரமேஷ் உள்பட தமிழகம் முழுவதும் இருந்து பல கோயில்களில் பணியாற்றும் நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.