
நாளை ஜூலை 1-ம் தேதி. 2025-ம் ஆண்டின் அடுத்த பாதி தொடங்கப் போகிறது. நிதி, சேமிப்பு, முதலீடு என்று இந்த ஆண்டின் முதலாம் தேதி ஏகப்பட்ட பிளான்கள் உங்களிடம் இருந்திருக்கலாம்.
அவை சக்சஸ் ஆகியும் இருக்கலாம்… ஆகாமலும் இருக்கலாம். எதுவாக இருந்தாலும், பிரச்னை இல்லை. ‘Better Late than Never’ என்ற ஆங்கில பழமொழியை நியாகப்படுத்தி, இந்த ஆண்டின் இரண்டாவது பாதியை தொடங்கலாம்.
உங்களது ஃபாஸ்ட் புட் வாழ்க்கையில் வேகமாக வேகமாக பறந்துகொண்டிருப்பீர்கள். ‘என்னென்ன திட்டங்கள்?’, எவ்வளவு முதலீடு’, ‘எது உங்களுக்கு செட் ஆகும்?’ ஆகியவற்றை தேடிப்பிடிக்க உங்களுக்கு சிரமமாக இருக்கலாம்.
அதை எளிமையாக்கும் விதமாக நாங்களே உங்களுக்காக சில திட்டங்களைத் தொகுத்து வழங்கியிருக்கிறோம். அதில் எது உங்களுக்கு பெஸ்ட் என நீங்களே தேர்ந்தெடுங்கள்.
முதலீடு என்றதும் ‘ரிஸ்க்’ என்கிற வார்த்தை உங்களை ஒரு ஸ்டெப் பேக் அடிக்க வைக்கும். ஆனால், இங்கே பட்டியலிப்படும் முதலீடுகளுக்கு அந்தப் பயம் வேண்டாம். காரணம், இவை அனைத்துமே அரசாங்கத்தால் வழங்கப்படும் முதலீடு திட்டங்கள் ஆகும். அதனால், இவைகளில் ரிஸ்க் மிக மிக குறைவு.
ஓகே… டிஸ்கிளைமர் எல்லாம் பார்த்துவிட்டோம். இனி திட்டங்களைப் பார்க்கலாம் வாங்க…
‘ரெக்கரிங் டெபாசிட்’ என்ற வார்த்தையை நீங்கள் ஏற்கனவே பல இடங்களில் கேள்விப்பட்டிருப்பீர்கள். ரெக்கரிங் டெபாசிட் என்றால் மாதா மாதம் குறிப்பிட்ட தொகையை போஸ்ட் ஆபீஸ் அல்லது வங்கியில் செலுத்திவருவீர்கள். இந்தத் திட்டம் முடியும் காலத்தில், நீங்கள் முதலீடு செய்த பணம், வட்டியோடு உங்கள் கையில் கிடைக்கும்.
ரெக்கரிங் டெபாசிட் வங்கிகளிலும் இருக்கும் திட்டம். ஆனால், வங்கிகளை விட, போஸ்ட் ஆபீஸ் சேஃப்.
மாதம் எவ்வளவு செலுத்த வேண்டும்? – மாதம் குறைந்தது 100 ரூபாயில் இருந்து எத்தனை ரூபாய் வரைக்கும் வேண்டுமானாலும்.
எவ்வளவு ஆண்டுகள்? – ஐந்து ஆண்டுகள்.
வட்டி விகிதம் – 6.7 சதவிகிதம்
தொடர்ந்து ஒரு ஆண்டிற்கு ரெக்கரிங் டெபாசிட் சரியாக கட்டி வந்தால், உங்கள் கணக்கில் இருக்கும் தொகையில் 50 சதவிகித தொகையை கடனாக வாங்கும் வசதி கூட உள்ளது.
சின்ன கணக்கு: ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.1,000 ரெக்கரிங் டெபாசிட்டில் கட்டி வந்தால், நீங்கள் கட்டி இருக்கும் மொத்த தொகை ரூ.60,000. திட்டத்தின் முடிவில், அசல் + வட்டியோடு, உங்களுக்கு ரூ. 71,369 கிடைக்கும்.
மாதா மாதம் கொஞ்ச தொகையைத் தான் முதலீடு செய்ய முடியும் என்பவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ்.

உங்களிடம் ‘லம்பாக’ ஒரு தொகை இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை நீங்கள் அப்படியே இந்தத் திட்டத்தில் முதலீடு செய்துவிட்டால், உங்களுக்கு ஆண்டின் இறுதியில் வட்டி கிடைக்கும்.
குறைந்தபட்ச தொகை – ரூ.1,000 முதல் எவ்வளவு வேண்டுமானாலும். இது ஒருமுறை முதலீடு திட்டம்.
மொத்த காலங்கள் – 1, 2, 3 அல்லது 5 ஆண்டுகள் – இதில் எது சௌகரியமோ, அதை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.
வட்டி விகிதம் – 1 ஆண்டுக்கால திட்டத்திற்கு 6.9 சதவிகிதம்;
2 ஆண்டுக்கால திட்டத்திற்கு 7 சதவிகிதம்,
3 ஆண்டுக்கால திட்டத்திற்கு 7.1 சதவிகிதம்,
5 ஆண்டுக்கால திட்டத்திற்கு 7.5 சதவிகிதம்.
உதாரணத்திற்கு, உங்களிடம் ரூ.10,000 இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். அதை நீங்கள் இந்தத் திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள் என்றால், உங்களுக்கு ஆண்டுக்கு 7.1 சதவிகிதம் வட்டி கிடைக்கும். மூன்று ஆண்டுக்கால இறுதியில், மொத்தமாக, ரூ.12,314 கிடைக்கும்.
இதுவும் ஒரு வகை ஃபிக்ஸ்ட் டெபாசிட் போன்றது தான்.
இதுவும் போஸ்ட் ஆபீஸ் திட்டம் தான். இந்தத் திட்டத்தின் ஸ்பெஷல் என்னவென்றால், நீங்கள் முதலீடு செய்யும் தொகை, 115 மாதங்களில் டபுளாக மாறிவிடும்.
நீங்கள் கிசான் விகாஸ் பத்ரா திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் முதலீடு செய்த 9 ஆண்டுகள், 7 மாதங்களில், உங்கள் கையில் இந்தப் பணம் ரூ.2 லட்சமாக கிடைத்துவிடும்.
மார்க்கெட் நிலவரம் எப்படி இருந்தாலும், இந்த டபுள் ஆன தொகை உங்கள் கையில் கட்டாயம் கிடைத்துவிடும். அதனால், பயம் தேவையில்லை.
இது ஒருமுறை முதலீடு திட்டம்.
குறைந்தபட்ச தொகை – ரூ.1,000 முதல் எவ்வளவு வேண்டுமானாலும்.
கால அவகாசம் – 115 மாதங்கள் (9 ஆண்டுகள் 7 மாதங்கள்)
வட்டி விகிதம் – 7.5 சதவிகிதம்.

நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு அந்த நிறுவனமே பி.எஃப் தொகையை செலுத்தி வரும். ஆனால், சொந்த தொழில் வைத்திருப்பவர்களுக்கு பி.எஃப்விற்கு வாய்ப்பு இல்லை. அவர்களுக்கு பெஸ்ட் ஆப்ஷன் பி.பி.எஃப்.
நிறுவனங்களில் கொடுக்கும் பி.எஃப் போக, இந்தத் திட்டத்திலும் முதலீடு செய்ய விரும்புவர்களும் தாரளாமாக செய்யலாம்.
இந்தத் திட்டம் ஓய்வுக்காலத்தில் பெரிதும் கைக்கொடுக்கும்.
குறைந்தபட்ச முதலீடு – ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.500, அதிகபட்சம் ரூ.1.5 லட்சம். மாதா மாதம் அல்லது ஆண்டுக்கு ஒரு முறை முதலீடு செய்யலாம்.
வட்டி விகிதம் – 7.1 சதவிகிதம்
மொத்த காலம் – 15 ஆண்டுகள்
சின்ன கணக்கு – ஒரு ஆண்டுக்கு ரூ.12,000 என 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். மொத்தமாக, நீங்கள் ரூ.1,80,000 முதலீடு செய்திருப்பீர்கள். திட்ட முடிவில் ரூ.2,97,240 உங்கள் கையில் கிடைக்கும்.
இதுவும் கிட்டத்தட்ட ஃபிக்ஸ்ட் டெபாசிட் வகை தான். உங்களிடம் இருக்கும் தொகையை மொத்தமாக முதலீடு செய்தால், 5 ஆண்டுகளின் இறுதியில், வட்டியுடன் உங்களது முதலீடு உங்கள் கையில்.
முதலீட்டு தொகை – குறைந்தபட்சம் ரூ.1,000 (இது ஒருமுறை முதலீடு திட்டம் ஆகும்)
மொத்த காலம் – 5 ஆண்டுகள்
வட்டி விகிதம் – 7.7 சதவிகிதம்.
இந்தத் திட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வட்டியை எடுக்க முடியாது. ஐந்து ஆண்டுகளின் முடிவில் தான் மொத்த வட்டியும் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தில் வட்டி விகிதம் காம்பவுண்டிங் முறையில் அதிகரிக்கும்.
சின்ன கணக்கு – முதலாம் ஆண்டு நீங்கள் ரூ.1 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இந்தத் தொகைக்கு அந்த ஆண்டின் வட்டி ரூ.7,700. மொத்தம் 1,07,700.
அடுத்த ஆண்டு, ரூ.1,07,700-க்கு வட்டி கணக்கிடப்படும். அப்போது வட்டி ரூ.8,292.90. இரண்டாம் ஆண்டின் இறுதியில் மொத்த தொகை ரூ.1,15,992.90.
மூன்றாவது ஆண்டு, தொகை ரூ.1,15,992.90, வட்டி 8,931.45. இந்த ஆண்டின் இறுதியில் உங்களது முதலீடு ரூ.1,24,924.34 ஆக இருக்கும்.
நான்காவது ஆண்டில் ரூ.1,24,924.34-க்கு ரூ.9,620.17 வட்டியாக கொடுக்கப்படும். இப்போது மொத்த தொகை ரூ.1,34,544.52.
கடைசி ஆண்டில் வட்டி ரூ.10,359.93, தொகை ரூ.1,34,544.52. கையில் கிடைக்கும் தொகை ரூ.1,44,904.45.

இந்தத் திட்டத்தில் நீங்கள் ஆரம்பத்தில் லம்பான தொகை முதலீடு செய்தால் போதும். மாதா மாதம் உங்களைத் தேடி, உங்களிடம் மாத வருமானம் வந்து சேர்ந்துவிடும்.
முதலீட்டு தொகை – குறைந்தபட்சம் ரூ.1,000; அதிகபட்சம் ரூ.9 லட்சம்.
வட்டி விகிதம் – 7.4 சதவிகிதம்
மொத்த காலம் – 5 ஆண்டுகள்.
சின்ன கணக்கு – ஆரம்பத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று எடுத்துக்கொள்வோம். 5 ஆண்டுகளுக்கு, மாதா மாதம், உங்களைத் தேடி ரூ.616.67 வந்துவிடும். 5 ஆண்டுகளில் மொத்தமாக மாதா மாதம் கிட்டத்தட்ட ரூ.37,000 உங்களுக்கு கிடைத்திருக்கும்.
ஐந்து ஆண்டுகளின் இறுதியில், உங்களது ரூ.1 லட்சமும் உங்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும்.
பெயரில் கூறியிருப்பதுப்போல, இது மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தில் 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தான் முதலீடு செய்ய முடியும். மேலே குறிப்பிட்டுள்ள திட்டங்களிலேயே, இது தான் மிக அதிக வட்டி விகிதத்தை கொண்ட திட்டம் ஆகும்.
மொத்த காலம் – 5 ஆண்டுகள்.
வட்டி விகிதம் – ஆண்டிற்கு 8.2 சதவிகிதம் (காலாண்டிற்கு ஒருமுறை வட்டி கொடுக்கப்பட்டு விடும்)
முதலீட்டு தொகை – குறைந்தபட்சம் ரூ.1,000 அதிகபட்சம் ரூ.30 லட்சம்.
சின்ன கணக்கு – ஆரம்பத்தில் ரூ.10 லட்சம் முதலீடு செய்யப்பட்டால், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வட்டியாக ரூ.20,500 கொடுக்கப்படும். ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.82,000.
ஐந்து ஆண்டுகளில் மொத்த வட்டி தொகை ரூ.4,10,000
ஐந்து ஆண்டுகளின் கடைசியில் உங்கள் கையில் ரூ.10 லட்சம் கிடைத்துவிடும்.
இது மூத்த குடிமக்களுக்கு சிறந்த ஆப்ஷன் ஆகும்.

இந்தத் திட்டம் பெரும்பாலானவர்கள் அறிந்ததே. இது பெண் குழந்தைகளின் படிப்பு அல்லது திருமணத்திற்கான முதலீடு திட்டம். இந்தத் திட்டமும் அதிக வட்டியை உடையே திட்டம்.
இந்தத் திட்டத்தில் உங்களது பெண் குழந்தைகளுக்கு 10 வயது ஆவதற்குள் இணைந்துவிட வேண்டும்.
முதலீட்டு தொகை: குறைந்தபட்சம் ஆண்டுக்கு ரூ.250; அதிகபட்சம் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம்.
வட்டி விகிதம்: ஆண்டுக்கு 8.2 சதவிகிதம்.
மொத்த காலம்: முதலீடு ஆரம்பித்த 21 ஆண்டுகள் அல்லது திருமணம் வரைக்கும் (ஆனால், திருமணம் 18 வயது முடிந்து தான் நடக்க வேண்டும்)
சின்ன கணக்கு: ஆண்டுக்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். முதலீடு செய்த கால அளவு 15 ஆண்டுகள். ஆண்டுக்கு காம்ப்வுண்டிங் முறையில் வட்டி விகிதம் 8.2 சதவிகிதம் வழங்கப்படும். ஆக, இந்தத் திட்டத்தின் முடிவில் ரூ.46 – 50 லட்சம் கிடைக்கும்.
இங்கே 8 திட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்திலுமே முதலீடு செய்ய வேண்டும் என்பதில்லை. எதாவது ஒன்றில் செய்தால் கூட போதும். அதுவே உங்களது எதிர்காலத்திற்கான சிறந்த தொடக்கம் ஆக அமையும்.
வட்டி விகிதம் மிகவும் குறைவாக இருக்கிறதே என்று நினைக்காதீர்கள். ரிஸ்க் எடுக்க பயப்படும்போது, நமக்கு லாபமும் கம்மியாகத் தான் இருக்கும். ஆனால், இந்த லாபங்கள் கேரண்டியானது என்பது சூப்பர் விஷயம்.
மேலே, குறிப்பிட்டுள்ள திட்டங்களில் பல வங்கிகளிலும் உள்ளது. அதில் வட்டியும் அதிகம். ஆனால், அவைகளை விட, போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் சேஃப்.
அப்புறம் என்ன மக்களே… ஹேப்பி இன்வஸ்டிங்!