
திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளி மாணவ, மாணவியரின் உடல்நலன், மனநலனை மேம்படுத்த ஜும்பா நடன பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு மத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜும்பா என்பது நடனத்தை உள்ளடக்கிய உடற்பயிற்சி ஆகும். கடந்த 2001-ம் ஆண்டில் கொலம்பிய நடன கலைஞர் பீட்டோ பெரெஸ், ஜும்பா நடனத்தை உருவாக்கினார். தற்போது உலகம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நடனம் பிரபலமாக இருக்கிறது.
கேரளாவில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிருக்கு ஜும்பா நடன பயிற்சி வழங்கும் திட்டம் நடப்பு கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மாணவ, மாணவியரின் உடல் நலன், மன நலன் மேம்படும். போதை பொருள் பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாவது தடுக்கப்படும் என்று கேரள கல்வித் துறை விளக்கம் அளித்து உள்ளது. ஆனால் பல்வேறு மத அமைப்புகள் ஜும்பா நடன பயிற்சி திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.