
புரி: உலகம் புகழ்பெற்ற ஒடிசாவின் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை 2 நாட்களுக்கு முன் தொடங்கியது. புரியில் உள்ள குடிச்சா கோயில் அருகே நேற்று காலை 4 மணிக்கு ரத யாத்திரை ஊர்வலம் வந்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்திருந்தனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்த பகுதியில் ரதயாத்திரையில் பங்கேற்கும் இரண்டு வாகனங்கள் உள்ளே நுழைந்தன. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பிரேமகந்த் மொகந்தி (80), வசந்தி சாகு (36), பிரபதி தாஸ் (42) ஆகியோர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர்.