
புதுடெல்லி: இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடைபெற்ற போரில் இந்திய விமானப்படையில் எத்தனை போர் விமானங்கள் சேதம் அடைந்தன என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும் என மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் கேள்வி எழுப்பினார்.
முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான் ஏற்கெனவே அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என பாகிஸ்தான் கூறுவது முற்றிலும் தவறான தகவல். தாக்குதல் உக்திகளில் ஏற்பட்ட தவறுகளை சரிசெய்து, அனைத்து வகை விமானங்களையும் பயன்படுத்தி பாகிஸ்தானின் தொலைதூர பகுதிகளில் துல்லிய தாக்குதல் நடத்தினோம்’’ என்றார்.