
சேலம்: அன்புமணியின் பின்னால் கட்சி நிர்வாகிகள் மட்டும்தான் உள்ளனர். ராமதாஸின் பின்னால் வன்னியர்கள், வாக்காளர்கள் உள்ளனர் என்று பாமக எம்எல்ஏ அருள் கூறினார்.
சேலத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: ராமதாஸைப் பற்றி எவருமே சொல்லாத, சொல்லத் தயங்கிய வார்த்தைகளை அன்புமணி பேசியது வேதனை அளிக்கிறது. கொலை, கொள்ளை வழக்கில் உள்ளவர்கள், சாலையோரம் இலந்தைப் பழம் விற்பவர்களுக்கு ராமதாஸ் பொறுப்புகளை வழங்கியிருப்பதாக அன்புமணி கூறியுள்ளார். பாட்டாளி வர்க்கத்தினரை அன்புமணி இழிவுபடுத்தி விட்டார்.