
சென்னை: ராமதாஸூடனான சந்திப்பில் திமுகவின் சூழ்ச்சி இல்லை என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சி.கே.பெருமாளின் 80-வது பிறந்த நாளையொட்டி, ‘உள்ளிக்கோட்டை டூ செங்கோட்டை’, ‘அரசியலில் 60 ஆண்டுகள்’ ஆகிய நூல்கள் வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, பேரவைத் தலைவர் அப்பாவு, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு, தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர்கள் கே.வி. தங்கபாலு, சு.திருநாவுக்கரசர் மற்றும் சி.கே.பெருமாள் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.