
மேலூர்: திராவிட மாடல் ஆட்சி செய்துக் கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு அதிகமான பெண்கள் வாக்களிக்கின்றனர் என மேலூர் அருகே நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.
மேலூர் அருகே கொட்டாம்பட்டி பகுதியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 12.70 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய ரேஷன் கடை கட்டிடத்தை தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி திறந்து வைத்தார். தொடர்ந்து கொட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டப்பட்டி, சூரப்பட்டி, கருங்காலக்குடி, வஞ்சிப்பட்டி, குன்னங்குடிபட்டி, உள்ளிட்ட 10 ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களுக்கு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 102-வது பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவியினை அமைச்சர் வழங்கினார்.