
மாவட்டம் தோறும் மனமகிழ் மன்றங்களை ஏற்படுத்தி போதைக்கு பாதை அமைத்து கொடுக்கிறார் முதல்வர் ஸ்டாலின் என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அந்தமான் மாநில தலைவரை தேர்தெடுக்கும் பொறுப்பு தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழிசை சவுந்தரராஜன் நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து, தமிழக அரசியல் நிலவரம், தமிழகத்தில் மாநில நிர்வாகிகள் பொறுப்புகள் வழங்கப்படுவது தொடர்பான பல்வேறு ஆலோசனை மேற்கொண்டார்.