
புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருக்கும் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார்.
கடந்த 25-ம் தேதி அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா சென்றார். அங்கு அவர் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், பிரதமர் மோடிநேற்று அவருடன் செயற்கைக்கோள் தொலை தொடர்பு வசதி மூலம் கலந்துரையாடினார். இருவரும் 18 நிமிடங்கள், 25 விநாடிகள் பேசினர். பிரதமர் மோடி – ஷுபன்ஷு சுக்லா இடையே நடைபெற்ற உரையாடல் விவரம்: