
நாட்டில் முதல்முறையாக அயோத்தி ராமர் கோயிலில் டைட்டானியம் ஜன்னல் கிரில்கள் விரைவில் பொருத்தப்பட உள்ளது.
இதுகுறித்து ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா நேற்று கூறியதாவது: நாட்டிலேயே முதல் முறையாக அயோத்தி ராமர் கோயிலில் ஜன்னல் கிரில்கள் டைட்டானியம் உலோகத்தால் பொருத்தப்பட உள்ளன. இது தனித்துவமானது. ஏனென்றால் இந்த உலோகம் மிக நீண்ட ஆயுட்காலம் கொண்டது. அதாவது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் ஆயுள் கொண்டது. மேலும் மற்ற உலோகங்களுடன் ஒப்பிடுகையில் டைட்டானியம் வலிமையானது மற்றும் இலகுவானது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.