
டிஜிட்டல் அரெஸ்ட் பெயரில் மும்பையை சேர்ந்த பெண் மருத்துவரிடம் இருந்து ரூ.3 கோடியை மர்ம கும்பல் அபகரித்துள்ளது.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த 70 வயது பெண் மருத்துவருக்கு கடந்த மே 28-ம் தேதி செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தன்னை அமித் குமார் என்றும் தொலைத் தொடர்பு துறை மூத்த அதிகாரி என்றும் அறிமுகப்படுத்தி கொண்டார்.