
திமுக அரசின் தவறுகள், மக்கள் பிரச்சினைகளை சமூக வலைதளங்கள் மூலம் உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அதிமுக ஐ.டி. அணி மாவட்ட செயலாளர்களுக்கு மாநில செயலாளர் ராஜ் சத்யன் அறிவுறுத்தியுள்ளார்.
அதிமுக தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) அணி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் கடந்த 27-ம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, மாவட்ட, மண்டல செயலாளர்கள் ஆலோசனை கூட்டம், அணியின் மாநில செயலாளர் ராஜ் சத்யன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அவர் பேசியதாவது: