
ராமதாஸ் சொல்வது அனைத்தும் பொய். அவர் சொல்லிதான் பாஜகவுடன் கூட்டணி பேசினேன் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி இடையே மோதல் போக்கு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இருவருக்கும் இடையே இன்னும் சமரசம் ஏற்படவில்லை. சமூக ஊடகங்களில் ராமதாஸ் அணியினர் மற்றும் அன்புமணி அணியினர் மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், அன்புமணி தலைமையில் பாட்டாளி சமூக ஊடக பேரவை கூட்டம் சென்னை சோழிங்கநல்லூரில் நேற்று நடந்தது. இதில் அவர் பேசியதாவது: