• June 29, 2025
  • NewsEditor
  • 0

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்​தில் தெற்கு கொல்​கத்தா சட்​டக் கல்​லூரி அமைந்​துள்​ளது. இதில் பயிலும் மாணவி கடந்த 25-ம் தேதி கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​யப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது. இது தொடர்​பாக அந்த மாணவி கஸ்பா காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​துள்​ளார்.

அதில், ‘‘தேர்வு விண்​ணப்​பத்தை பூர்த்தி செய்​வது தொடர்​பாக கல்​லூரி ஊழியர் மனோஜித் மிஸ்​ராவை சந்​தித்​தேன். அப்​போது தன்னை திரு​மணம் செய்து கொள்​ளு​மாறு அவர் என்​னிடம் கூறி​னார். இதற்கு மறுப்பு தெரி​வித்​தேன்.

பின்​னர், 2 மாணவர்​களை அழைத்து என்னை பாது​காவலர் அறைக்கு கூட்​டிச் செல்​லு​மாறு அறி​வுறுத்​தி​னார். அவர்​கள் என்னை வலுக்​கட்​டாய​மாக அங்கு அழைத்​துச் சென்​றனர். பின்​னர் பாது​காவலரை வெளியே இருக்​கு​மாறு கூறி​விட்டு என்னை வன்​கொடுமை செய்​தனர். இந்த சம்​பவத்தை தடுக்க பாது​காவலர் எந்த நடவடிக்​கை​யும் மேற்​கொள்​ள​வில்​லை’’ என கூறி​யிருந்​தார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *