
கொல்கத்தா: ‘கொல்கத்தாவில் சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கேட்டு ராஜினாமா செய்ய வேண்டும். இந்த வழக்கில் கைதான அனைவரும் திரிணமூல் காங்கிரஸுடன் தொடர்புடையவர்கள்’ என்று பாஜக கூறியுள்ளது.
இது தொடர்பாக பேசிய பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறும்போது, "இது ஒரு வகையில் அரசால் ஆதரிக்கப்படும் மிருகத்தனமான கொடூரக் குற்றம். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க பாஜக தலைவர் ஜே.பி.நட்டா நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். அவர்கள் இந்த விவகாரத்தை விசாரித்து நடந்தவற்றை சொல்வார்கள். எம்.பி.க்கள் பிப்லாப் குமார் தேப் மற்றும் மனன் குமார் மிஸ்ரா, முன்னாள் எம்.பிக்கள் சத்யபால் சிங் மற்றும் மீனாட்சி லேகி ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.