
இந்தியாவின் ‘Secretary of the Research and Analysis Wing’ என்றழைக்கப்படும் ‘RAW’ உளவு அமைப்பின் தலைவராகப் பதவி வகித்துவரும் ரவி சின்ஹாவின் பதவிக்காலம் இந்த மாதம் ஜூலை 30-ம் தேதியோடு நிறைவடைகிறது. இதையடுத்து இதன் தலைவராக பராக் ஜெயின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் 1989‑ஆம் ஆண்டில் இந்திய காவல் பணியில் (IPS) பஞ்சாப் கேடரில் பணியாற்றியவர்.
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டதையடுத்து பாகிஸ்தான் – இந்திய எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட ஆபரேஷன் சிந்தூரில் முக்கியப் பங்காற்றியவர்.
கனடா, இலங்கை போன்ற நாடுகளிலும் இந்தியாவின் நுண்ணறிவுச் செயலகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பணியாற்றியவர். குறிப்பாக கனடாவில் சில முக்கியமான அமைப்புகளை ரகசியமாகக் கண்காணித்தவர்.
ஜம்மு–காஷ்மீரில் 370 நீக்கப்பட்டபோதும், பாலகோட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோதும் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்.
நாட்டின் பாதுகாப்புப் பணியில் மனித மற்றும் தொழில்நுட்ப நுண்ணறிவு இரண்டிலும் சிறந்து விளங்கி வரும் பராக் ஜெயின் 2025 ஜூலை 1 முதல் 2 வருடக்காலத்திற்கு ‘RAW’ உளவு அமைப்பின் தலைவராகப் பதவியில் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs