• June 28, 2025
  • NewsEditor
  • 0

கடந்த ஜூன் 25-ம் தேதி அன்று கொல்கத்தா நகரின் சவுத் கொல்கத்தா சட்டக் கல்லூரியின் வளாகத்தில் 24 வயது மாணவி மூன்று நபர்களால் கூட்டுப் பாலியல் வன்முறை செய்யப்பட்ட விவகாரம் மாணவர்கள், பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா அரசியல் வட்டாரத்திலும் சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறது.

கூட்டு பாலியல் வன்முறை

பாதிக்கப்பட்ட மாணவி தைரியமாக முன்வந்து தனக்கு நடந்த பாலியல் கொடுமை குறித்தும் அதற்குக் காரணமான மூன்றுபேர் மீதும் புகார் அளித்திருக்கிறார்.

மருத்துவ சோதனைமூலம் அம்மாணவிக்கு நடந்த பாலியல் கொடுமை உறுதி செய்யப்பட்டு, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் மாணவரும், கல்லூரி பணியாளராக இருந்த மனோஜித் மிஸ்ரா (31), மற்றும் கல்லூரி மாணவர்கள் சையிப் அகமத் (19), பிரமித் முகர்ஜி (20) ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் மூவரும் திரிணமூல் காங்கிரஸ் மாணவர் அணி (TMCP) உறுப்பினர்கள் என்று சர்ச்சைகள் வெடிக்க, திரிணமூல் காங்கிரஸ் கட்சி அதனை திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

பாதிக்கப்பட்ட மாணவியின் வாக்குமூலம்

இந்த வழக்கில் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் பாதிக்கப்பட்ட மாணவி காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்திருக்கிறார். அதில், “தேர்வுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க கல்லூரிக்கு கடந்த ஜூன் 25ம் தேதி புதன் கிழமை சென்றிருந்தேன். கல்லூரி வளாகத்தில் இருந்த மனோஜித் மிஸ்ரா, சையிப் அகமத், பிரமித் முகர்ஜி மூவரும் என்னை பாலியல் சீண்டல் செய்தனர்.

பாலியல் வன்முறை

காலில் விழுந்து கதறி அழுது கெஞ்சினேன்

அவர்கள் காலில் விழுந்து கதறி அழுது கெஞ்சினேன். என்னை கல்லூரியின் காவலர்களின் அறைக்கு இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் கொடுமை செய்துவிட்டனர். மாலை 7.30 மணிக்கு என்னை அறையில் வைத்து கூட்டுப் பாலியல் கொடுமை செய்தவர்கள் இரவு 10.50 மணிக்குத்தான் என்னை விட்டார்கள். இதை வீடியோ எடுத்து வைத்துள்ளதாகவும், காவல்துறையிடம் புகாரளித்தால் இணையதளங்களில் பரப்பிவிடுவோம் என்று மிரட்டினார்கள்” என்று வாக்குமூலத்தில் கூறியிருந்தார்.

பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனோஜித் மிஸ்ராவின் தந்தை ராபின் மிஸ்ரா

இந்நிலையில் இந்த வழக்கில் பாலியல் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனோஜித் மிஸ்ராவின் தந்தை ராபின் மிஸ்ரா, “இந்த வழக்கில் நான் என் மகனுக்காக நிற்க மாட்டேன், எந்த உதவியும் செய்யமாட்டேன். வழக்கு விசாரணையை அவனே பார்த்துக்கொள்ளட்டும்.

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி

பாதிக்கப்பட்ட பெண்ணும் ஒரு தந்தையின் மகள்தான். என் மகன் குற்றம் செய்தது உறுதியானால் சட்டப்படி என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்.” என்று கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி, “எங்கள் ஆட்சியில் பெண்களுக்குப் பாதுக்காப்பு இருக்கிறது. அதில் உறுதியாக இருக்கிறோம். ஆனால், கல்லூரியில் நண்பர்களுக்குள்ளேயே நடக்கும் பாலியல் வன்முறைகளை என்ன செய்து தடுப்பது. அதற்கும் அரசைக் குற்றம் சாட்டுகிறீர்கள். பாத்திரிக்கையாளர்கள் ஏதோவொரு உள்நோக்கத்துடன் அரசை, எங்கள் கட்சியைத் தொடர்புப்படுத்தி இப்படியான கேள்விகளை என்னிடம் கேட்கிறார்கள்” என்று பேசியிருப்பது இந்த விவகாரத்தில் சர்ச்சைகளைக் கிளப்பி வருகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *