
திண்டுக்கல்: அரசு விழாவுக்காக அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களிடம் கட்டாய வசூல் நடப்பதாக வெளியான ஆடியோவில் பேசிய நபரை தேடி வருகிறோம் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.81 கோடியில் புதிய சி.டி.ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் புளுரோஸ்கோபி கருவிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (ஜூன் 28) தொடங்கி வைத்தார். இதே போல், ரூ.2.25 கோடியில் திண்டுக்கல்லில் 4 இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டுவதற்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.