
நிலத்தடி நீர் வீணாவதையும், தவறாக பயன்படுத்துவதையும் தவிர்க்க மத்திய அரசு நிலத்தடி நீருக்கு வரி விதிக்க திட்டமிட்டுள்ளதாக நேற்று (ஜூன் 27) தகவல்கள் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து பலரும் இதற்கு எதிர்புத் தெரிவித்து ‘மத்திய அரசு இந்த முடிவை உடனடியாக கைவிட வேண்டும்’ என்று கூறியிருந்தனர். காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட பலரும் மத்திய அரசைக் கடுமையாகக் கண்டித்திருந்தனர்.
இதைத் தவறாக செய்தி என்று மறுத்திருக்கும் மத்திய அரசு இதுகுறித்து இன்று (ஜூன் 28) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
“மத்திய அரசு முன்னோடியாகக் கொண்டு வரும் புதிய திட்டத்தின் கீழ் விவசாயிகள் நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கு கட்டணம்/ வரி செலுத்த வேண்டும் என்று சில ஊடகங்கள் தவறாக செய்தி வெளியிட்டது நீர்வளத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு வந்தது.
M-CADWM திட்டமானது நீர்ப்பாசன செயல்திறனை மேம்படுத்துதல், சமமான நீர் விநியோகத்தை உறுதி செய்தல், பயனுள்ள நீர் மேலாண்மை மற்றும் நவீன தொழில்நுட்பம் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், விவசாயிகள் நிலத்தடி நீரைப் பயன்படுத்துவதற்கு வரி விதிக்கப்படும் என்ற எந்தவிதமான உத்தரவும் இல்லை. சமீபத்தில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் ஸ்ரீ சி.ஆர். பாட்டீலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவர் தெளிவாக விளக்கமளித்துவிட்டார்.

இந்திய அரசியலமைப்பின் கீழ் ‘விவசாயம்’ மற்றும் ‘நீர்’ இரண்டும் மாநில பிரிவுகளின் கீழ் வருகிறது. நிலத்தடி நீருக்கு வரி வசூலித்தாலும் மாநில அரசு மட்டுமே அதுதொடர்பாக எந்த ஒரு முடிவும் எடுக்க முடியும்” என்று தெரிவித்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs