
சென்னை: தேர்தலில் ஒருமுறைகூட போட்டியிடாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளை நீக்கும் நடவடிக்கையாக, தமிழகத்தைச் சேர்ந்த 24 கட்சிகளுக்கு முதல்கட்டமாக நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட, ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தொடர்பான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 2019-ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத 345 பதிவு செய்யப்பட்ட கட்சிகளை முதல்கட்டமாக பட்டியலில் இருந்து நீக்கும் நடைமுறையை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது.