
ரத்லம்: தண்ணீர் கலந்த டீசலை நிரப்பியதால் ம.பி. முதல்வரின் கான்வாய் வாகனங்கள் சாலையில் பழுதடைந்து நின்றன. இது தொடர்பாக அந்த பெட்ரோல் நிலையத்துக்கு அதிகாரிகள் 'சீல்' வைத்துள்ளனர்.
ம.பி. முதல்வர் மோகன் யாதவ் நேற்று ரத்லம் மாவட்டத்தில் பிராந்திய தொழில் திறன் மற்றும் வேலைவாய்ப்பு மாநாட்டை தொடங்கி வைத்தார். இந்நிலையில் அவரது பயணத்தின் போது உடன் செல்லும் கான்வாயில் இடம்பெறுவதற்காக இந்தூரில் இருந்து 19 கார்கள் புறப்பட்டுச் சென்றன.