• June 28, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னையில் பருவமழைக் காலங்களில் மழை நீர் தேங்காமல் தடுக்க 21 நீர்வழி கால்வாய்களில் ரூ.211.86 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகள் நடைபெறுவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பருவமழைக் காலங்களில் சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கும் வகையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்தவகையில், பருவமழைக் காலங்களில் மழை நீர்வடிகால்களில் இருந்து நீர்வழிக் கால்வாய்களுக்கு செல்லும் மழைநீர், நீர்வழிக் கால்வாயில் தேங்காமல் தவிர்க்கும் வகையில் வெள்ள தடுப்பு சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *