
புதுடெல்லி: ஆறு ஆண்டு கால காத்திருப்புக்கு பிறகு, கைலாஷ் மானசரோவர் புனித யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது. கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது கயிலை மலை மற்றும் மானசரோவர் ஏரிக்குச் செல்லும் புனிதப் பயணமாகும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் செப்டம்பர் வரை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை வெளியுறவு அமைச்சகம் செய்து வருகிறது. உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள லிபுலேக் கணவாய் மற்றும் சிக்கிம் மாநிலத்தில் உள்ள நாது லா கணவாய் வழியாக இந்த யாத்திரை நடைபெறுகிறது.
சவாலான 45 கி.மீ. மலையேற்றப் பயணம் உட்பட இந்த யாத்திரை 23 முதல் 25 நாட்கள் வரை நீடிக்கிறது. இதில் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர்.