
சென்னை: புதிதாக வெளியாகும் திரைப்படங்களை முதல் மூன்று நாட்களுக்கு விமர்சனம் செய்ய தடை கோருவது பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிரானது என தெரிவித்துள்ள உயர் நீதிமன்றம், இதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், ‘கோடிக்கணக்கில் செலவு செய்து, பலரது உழைப்பில் உருவாகும் திரைப்படங்களுக்கு எழும் நேரடி மற்றும் மறைமுக விமர்சனங்களால் அந்தப் படம் தோல்வியடைந்து நஷ்டத்தை சந்தித்து வருகிறது.