• June 28, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் மா.பொ.சிவஞானத்தின் 120-வது பிறந்தநாளையொட்டி, அவரது சிலைக்கு அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சுதந்திரப் போராட்ட வீரரும், சிலம்புச் செல்வர் என்று அழைக்கப்படுபவருமான மா.பொ.சிவஞானத்தின் 120-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்தநாளை ஒட்டி சென்னை தி.நகரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து, அதன் அருகே அவரது திருவுருவப் படமும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மு.மகேஷ் குமார், தமிழ் வளர்ச்சித் துறை செயலர் வே.ராஜாராமன் உள்ளிட்டோர் மா.பொ.சி. படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *