• June 27, 2025
  • NewsEditor
  • 0

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான லெஜண்டரி இந்தி பாடகியான அனுராதா பாவுத்வாலுடன் இரண்டு பாடல்கள் மட்டுமே பணியாற்றியுள்ளார்.

“Kissa Hum Likhenge” (காதல் கடிதம் தீட்டவே மெட்டு) மற்றும்  “Pa Jaye Kismat Se Tum Humko Mile Ho” (மலரோடு மலரிங்கு மெட்டு) ஆகிய இரண்டு பாடல்களும் இன்றளவும் ரசிகர்களால் மனதில் நிற்கும் கல்ட் கிளாசிக்குகளாக உள்ளன.

Anuradha Paudwal

சமீபத்தில் யூடியூப் தளம் ஒன்றுக்கு பேட்டியளித்த அனுராதா பவுத்வால், ரஹ்மானைப் புகழ்ந்தும், அவர் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் விதம் பற்றி சிலாகித்தும் பேசியுள்ளார்.

Rahman-ன் அரிய திறமை!

“இசை ஒரு விளக்கைப் போன்றது. ஒருவர் அதற்கான ஸ்விட்சைப் போட்டதும், ஒவ்வொரு மூலை முடுக்கும் வெள்ளிச்சமாகிவிடும். நான் இதை ரஹ்மான்ஜீயிடம் பார்த்திருக்கிறேன். அவரது சொந்த வேலைகள் மட்டுமல்லாமல், தன்னைச் சுற்றியிருப்பவர்களும் இசையில் செழிக்க வேண்டுமென எண்ணுவார்.” எனப் பாராட்டினார் அனுராதா.

“நான் ஒருநாள் ரஹ்மான்ஜீயின் ஸ்டூடியோவில் இருந்தேன். அங்கே ஒரு சின்ன பெண் ரெகார்டிங்கில் பாடிக்கொண்டிருந்தார். அந்த பெண் நல்ல முகபாவத்துடனும் குறிப்புடனும் அழகாக பாடிக்கொண்டிருந்தார். அவரிடம் ரஹ்மான் எதை எப்படிப் பாட வேண்டும் எனச் சொல்லிக்கொண்டிருந்தார்.

ரஹ்மான்
ரஹ்மான்

அது ஒரு பெரிய கலை. அவர்களுக்கு என்ன வேண்டும், நீங்கள் எதைத் தவறவிடுகிறீர்கள் என்பதைச் சொல்வது. நீங்கள் சரியாக எதைத் தவறவிடுகிறீர்கள் என்பதை அவர்கள் சரியாக உணர்ந்தால் மட்டுமே அப்படிச் சொல்ல முடியும். அது அவரது ஸ்டூடியோவில் பார்த்த மிக அரிதான ஒரு திறமை” எனக் கூறியுள்ளார்.

ரஹ்மான் மாணவர்களுக்கு அளிக்கும் பயிற்சிகள் பற்றிப் பேசியவர், “ரஹ்மானின் பள்ளியில் இருந்து வரும் மாணவர்கள் வேற லெவல் தயார்நிலையில் வருகின்றனர். சாதாரண ஆட்களுக்கு இது எல்லாமே தெரியாது.

ரஹ்மான் மிகவும் அடக்கமான, நல்ல மனிதர். எவ்வளவோ உயரங்களை அடைந்தபிறகும், ஒரு அப்பாவி பள்ளிக் குழந்தைப் போல இருக்கிறார். எந்தவித ஆடம்பரமோ, மேனிபுலேட் செய்வதோ கிடையாது. அவரைப் போன்ற எளிய மனிதர்களைப் பார்ப்பது மிகவும் அரிதாகிவிட்டது.

இந்த தரம் தான் அவரது இசையிலும் வெளிப்படுகிறது. அதனால்தான் பொதுமக்கள் அவரது இசையை நெருக்கமாக உணர முடிகிறது.” எனக் கூறியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *