
திண்டிவனம்: “பாமகவில் நிலவும் பிரச்சினைக்கு திமுகதான் காரணம் என்று அன்புமணி புரிதல் இல்லாமல் சொல்கிறார். பாஜகவை சமாதானப்படுத்துவதற்காக அன்புமணி அவ்வாறு கூறியிருப்பாரே தவிர, அவருடைய உள்மனது அப்படி சொல்லாது” என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
திண்டிவனத்தில் உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (ஜூன் 27) சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: கடந்த 40 வருடங்களாக பொது வாழ்க்கையில் தொடர்பில் இருப்பவர் பாமக நிறுவனர் ராமதாஸ். அவரை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்ததில் எந்தவித அரசியலும் கிடையாது.