
புதுடெல்லி: அரசியலமைப்பு சட்டத்தின் முகப்பில் உள்ள மதச்சார்பின்மை, சோசலிசம் எனும் வார்த்தைகளை நீக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் கூறி இருந்த நிலையில், அந்த அமைப்பு அரசியலமைப்பை ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை என காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “இந்திய அரசியலமைப்பை ஆர்எஸ்எஸ் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை. அரசியலமைப்பை உருவாக்கும் பணிகள் தொடங்கிய நவம்பர் 30, 1949 முதல் அதில் ஈடுபட்ட டாக்டர் அம்பேத்கர், நேரு உள்ளிட்டோரை ஆர்எஸ்எஸ் தாக்கியது. ஆர்எஸ்எஸ்ஸின் சொந்த வார்த்தைகளில் சொல்வதானால், அரசியலமைப்பு மனுஸ்மிருதியைப் போல் இல்லை.