
புதுடெல்லி: நாட்டின் மன உறுதியைக் குலைக்கவே பிரதமர் இந்திரா காந்தி, அவசரநிலையைப் பிறப்பித்தார் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அவசரநிலை பிறப்பிக்கப்பட்டதன் 50-ம் ஆண்டை ஒட்டி, பாஜகவின் இளைஞர் அமைப்பான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் உரையாற்றிய எஸ். ஜெய்சங்கர், “1975 ஆம் ஆண்டு அவசரநிலை பிறப்பிக்கப்பட்டபோது, அனைவரும், குறிப்பாக இளைஞர்கள், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்கள். மாணவர்கள் விடுதியில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, திடீரென்று அவர்களில் சிலர் எந்தக் காரணமும் இல்லாமல் அழைத்துச் செல்லப்பட்டார்கள். இப்படி நடப்பது சாதாரணமானது அல்ல. இது அனைத்தும் நாட்டின் மன உறுதியைக் குறைக்கவே செய்யப்பட்டது.