• June 27, 2025
  • NewsEditor
  • 0

வேல்ஸ் நிறுவனம் அடுத்ததாக 10 படங்களை தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. 2025-2027 வரை தயாரிக்கவுள்ள படங்களை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது வேல்ஸ் நிறுவனம். இதல் யார் நடிக்கவுள்ளார்கள் என்றெல்லாம் இல்லாமல் எந்த இயக்குநர்கள் ஒப்பந்தமாகி இருக்கிறார்கள் என்பதை மட்டும் அறிவித்துள்ளார்கள். பல்வேறு முன்னணி இயக்குநர்கள் இப்பட்டியலில் இருப்பதால், அடுத்ததாக திரையுலகில் பெரிய முதலீட்டை வேல்ஸ் நிறுவனம் செய்யவிருப்பது உறுதியாகி இருக்கிறது.

இயக்குநர்கள் சுந்தர்.சி, கவுதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், மாரி செல்வராஜ், பிரேம் குமார், ஜூட் ஆண்டனி ஜோசப், அருண்ராஜா காமராஜ், விக்னேஷ் ராஜா, செல்ல அய்யாவு மற்றும் கணேஷ் கே.பாபு ஆகியோரது அடுத்த படங்களை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதில் சுந்தர்.சி இயக்கத்தில் ‘மூக்குத்தி அம்மன் 2’ படம் மட்டுமே தயாரிப்பில் இருக்கிறது. விக்னேஷ் ராஜா படத்தின் படப்பிடிப்புக்காக அரங்குகள் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *