• June 27, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் மாநில விருதுகளுக்கு, வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்தி தினத்தன்று தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு மாநில விருதுகளை முதல்வர் வழங்கி கவுரவித்து வருகிறார். அதன்படி, நடப்பாண்டு சுதந்திர தின விழாவில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட உள்ளன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *