
சங்கரன்கோவிலில் திமுக நகர்மன்ற தலைவருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களே அதிமுக-வுடன் அலையன்ஸ் போட்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அறிவாலயத்தை அதிரவைத்திருக்கிறார்கள்.
30 வார்டுகளை கொண்ட சங்கரன்கோவில் நகராட்சியில் 9 வார்டுகளில் திமுக வென்றது. 12 வார்டுகளை அதிமுக கைப்பற்றியது. இருந்தபோதும் கூட்டணி கட்சிகளின் தயவில் நகராட்சி தலைவர் பதவியை அதிர்ஷ்டக் குலுக்களில் கைப்பற்றியது திமுக. தென்காசி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் சரவணனின் மனைவி உமா மகேஸ்வரி சேர்மனானார். அதிமுக-வைச் சேர்ந்த கண்ணன் (எ) ராஜு வைஸ் சேர்மனானார்.