
திருப்பூர்: இன்ஸ்டாகிராம் குழுவால் திருப்பூரில் மாணவிகள் மோதல் சம்பவத்தை தொடர்ந்து, மாணவிகளுக்கு கவுன்சிலிங் தர கல்வித் துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சிப் பகுதியில் மாநகராட்சிப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 படிக்கும் சில மாணவிகள் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் குழு ஆரம்பித்து சமூக வலைத்தளங்களில் போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளனர். அதேபோல், திருப்பூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசுப் பள்ளி மாணவிகளும் இதுபோலவே இன்ஸ்டாகிராமில் குழு தொடங்கி தங்கள் பதிவுகளை போட்டு வந்துள்ளனர்.